Wednesday, March 23, 2011

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன? - தமிழ் முருகேசன், 23.03.2011.

2011 தேர்தல் திருவிழா துவங்கிவிட்டது. வழக்கம்போல் இலவசத்திட்டங்களும் தேர்தல் அறிக்கைகளாக வெளியிடப்படுவதும் ஆரம்பமாகிவிட்டன. வாக்குக்குப் பணம் கொடுப்பது எப்படி என ஒரு சில கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் அமைப்புகள் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நிலையை எடுத்துள்ளன. ஆனால் இத்தகைய அமைப்புகள் மீண்டும் ஒருமுறை தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது ஒருபுறம் வியப்பாகவும் மறுபுறம் வேதனையாகவும் உள்ளது.
காங்கிரசை ஒழித்தால் மட்டும் தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடுமா? காங்கிரசை ஆரம்பநிலையிலிருந்து இங்கு வளர்த்து விட்டவர்கள் திராவிட இயக்கத்தினர்தான். பெரியார் என அழைக்கப்பட்ட ஈ..வே.ராமசாமி நாயக்கர் அவர்களே பச்சைத்தமிழர் என காமராசரை ஆதரித்து காங்கிரசின் வளர்ச்சிக்கு வழிவகுத்தார். அண்ணாவை எதிர்ப்பதற்கு காமராசரை ஆதரிப்பது என இப்போதுள்ள வீரமணியின் குருநாதராக பெரியார் செயல்பட்டார்.
1965 இந்தி எதிர்ப்புப்போரில் ஏறத்தாழ நானூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதற்குக் காரணமாக இருந்தவர் அப்போதைய தமிழக காங்கிரஸ் முதல்வரான பக்தவச்சலம். அவருக்கு மணிமண்டபம் கட்டி அழகு பார்த்தவர் தமிழினத் தலைவர் கலைஞர் கருணாநிதி. 1970 களிலேயே தமிழனின் இரத்தம் காய்வதற்கு முன்பே, நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக என முழங்கியவர் தான் திராவிடப் பேரியக்கதின் குலக்கொழுந்து! மீண்டும் 1980 தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு வைத்து காங்கிரசிற்கு வாய்ப்புகளை வழங்கி அதற்கு உயிரூட்டியவர் தான் வாழும் பெரியார்.
ஈழத்தில் நாள்தோறும் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபொழுது, சிக்கலில் இருந்து தப்பிப்பதற்காக மருத்துவமனையில் முடங்கிய இராசராச சோழன். முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குக் காரணமான சோனியாவை சொக்கத்தங்கம் என்றழைத்த வாழும் வள்ளலார். இந்தியாவைக் கொள்ளையிட்டு தனது சொந்த கசானாவை பெருக்கியும், கேட்டால் ஆ.இராசா தலித் அதனால்தான் எல்லோரும் பாய்கிறார்கள் என விளக்கம் கொடுக்கிறார். தலித் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?. தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு அதிக அளவில் தொகுதிகளைக் கொடுத்து இல்லாத காங்கிரசுக்கு பாலும் முட்டையும் கொடுத்து வளர்த்துவிட்டவர்தான் வாழும் அம்பேத்கர்.
இந்நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசை மட்டும் எதிர்ப்பது என்பது சப்பைக்கட்டு கட்டுவது போன்றதுதான். நச்சுப்பாம்பிற்கு பால் வார்ப்பவர்களை தடுத்தால்போதும் அது தமிழ்மண்ணிலிருந்து அழிக்கப்படும். தி.மு.க.வை தோற்கடிப்பதன் மூலமே காங்கிரசை முடக்கமுடியும். நாம் எப்படி ஜெயலலிதாவை ஆதரிக்க முடியும்?- என கேட்கப்படுகின்றது- இதற்கான விடை, திராவிட இயக்கங்கள் அல்லாத தமிழ்த் தேசிய அமைப்புகளை ஒன்றிணைத்த மூன்றாவது அணிதான் சிறந்தது. ஆனால் அதற்கான காலம் கனியாத பொழுது இப்பொழுது அ.தி.மு.க. கூட்டணியை வெற்றியடையச்ª செய்வதுதான் ஒரே தீர்வு...
தே.மு.தி.க.வும், ம.தி.மு.க.வும் மூன்றாவது அணிக்குப் பொருத்தமாவையல்ல. இதுவும் வேறொரு திராவிட சாக்கடைதான். நாட்டைக் கொள்ளையடிப்பதில், பொய்யும் புரட்டும் பேசுவதில் பார்ப்பனர்களை மிஞ்சியவர்கள்தான் இந்த திராவிடப் பொய்யர்கள். ஆகவே, நமக்குள் சந்தேகங்கள் வேண்டாம்..... எதிரியோடு: பேச்சுவார்த்தையாவது நடத்தலாம்.... துரோகியோடு பேச்சுவார்த்தை நடத்த முடியுமா?
இல்லாத ஆரிய மா¬யையைக் காட்டி, இருக்கிற தமிழ்த் தேசியத்தை மறைத்து, இல்லாத திராவிடம் பேசி ஏமாற்றியவர்களை முதலில் வீட்டிற்கு அனுப்புவோம். அடுத்த 2016 தேர்தலில் அ.தி.மு.க.வையும் தமிழ்நாட்டு அரசியலில் இருந்து ஒழித்துக்கட்டுவதாகத்தான் நமது திட்டம் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment